சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்ற ரெயில் நடைமேடையில் ஏறி விபத்து : - சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. நேற்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இன்று காலை கன்னியாகுமரி சென்றடைந்தது. பயணிகள் இறங்கியதும், ரெயில் மற்றொரு நடைமேடைக்கு மாற்றப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக எக்ஸ்பிரஸ் (12633) ரெயிலின் இரண்டு பெட்டிகள் ரெயில்வே நடைமேடையில் ஏறி விபத்துக்குள் சிக்கியது. இந்த விபத்தினால் ரெயில்வே நடைமேடை மற்றும் தண்டவாளம் மிகவும் சேதம் அடைந்தது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தஒரு பாதிப்பும் இல்லை. இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
[ரெயில்வே News,ரெயில்வே breaking news, ரெயில்வே current news on tamil,ரெயில்வே பாதுகாப்பை ,இந்தியன் ரெயில்வே இணையத்தளத்தில் புதிய வசதிகள்., ஆன்லைனில் ரெயில்வே டிக்கெட் ,ரெயில் துறை, ரெயில்வே பட்ஜெட்]
[ரெயில்வே News,ரெயில்வே breaking news, ரெயில்வே current news on tamil,ரெயில்வே பாதுகாப்பை ,இந்தியன் ரெயில்வே இணையத்தளத்தில் புதிய வசதிகள்., ஆன்லைனில் ரெயில்வே டிக்கெட் ,ரெயில் துறை, ரெயில்வே பட்ஜெட்]
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.